மாம்பழம் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று தான். பண்டைய கால முதலே மாம்பழங்களுக்கு மிகவும் பெயர்பானது மால்டா மாவட்டம். இந்த பகுதியில் விளையும் சுவையான மாம்பழங்களுக்காக நாடு முழுவதுமே மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் தற்போது வெளிநாடுகளில் விளையும் மாம்பழங்கள் தான் அதிகளவில் இந்த மால்டா மாவட்டத்தில் கடைகளில் விற்கப்படுகின்றன.
குறிப்பாக ரம்ஜான் கொண்டாடப்படும் மாதத்தில் மாம்பழங்களின் விற்பனையானது மிகவும் சூடு பிடிக்கும். இந்த காரணத்தினாலேயே ரம்ஜான் மாதத்தின் போது மற்ற மாநிலங்களில் விளையும் மாம்பழத்தின் தேவைகளும் மிகவும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக மாம்பழத்தின் விலையும் அதிகரிக்கிறது.
ஆனால் என்னதான் மற்ற மாநிலங்களில் இருந்து மாம்பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டாலும் அவை மால்டா மாம்பழங்களை போல சுவையாக இருப்பதில்லை. ஆனால் சில மக்களுக்கு இதுவும் பிடித்தமானதாகவே இருக்கிறது. குறிப்பாக சித்திரை மாதங்களில் விலையும் மாம்பழங்கள் சென்னை போன்ற இடங்களில் இருந்து மால்டா மாவட்டத்திற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அவை மால்டா மாம்பழங்களை போல சுவை மிகுந்தனவாக இல்லை என்றாலும் மக்கள் ரசிப்பதற்கு போதுமான அளவு இனிப்பு சுவையை கொண்டுள்ளன. தற்போதைய நிலையில் இரண்டு வித மாம்பழங்களை அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.
Read More : தேனிக்கு வந்த அரிய வகை ஆந்தை.. பொதுமக்கள் ஆச்சரியம்!
மால்டா மாவட்டத்தில் விளையும் அனைத்து விதமான மாம்பழங்களும் தற்போது தான் கனிவதர்கான ஆரம்ப நிலையிலேயே உள்ளன. இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து தான் அவை முழுவதுமாக பழமாக மாறும். இந்த கால இடைவெளியில் வெளிநாட்டு இறக்குமதி செய்யப்படும் மாம்பழங்கள் சந்தையை ஆக்கிரமித்து விடுகின்றன. மக்களும் மாம்பழத்தின் மீது உள்ள ஆவலால் வெளிநாட்டு மாம்பழங்களாக இருந்தாலுமே அவற்றை மிகவும் ஆர்வமுடன் வாங்குகின்றனர். ஆனால் இவற்றின் விலை அதிகமாகவும் சுவை மிகவும் சுமாராக தான் இருக்கிறது. மேலும் இவற்றின் அளவும் மால்டா மாம்பழங்களை விட மிகவும் சிறிதாக இருக்கிறது.
தற்போது தென்னிந்தியாவில் விளைவிக்கப்படும் மாம்பழங்கள் பலவும் சந்தைகளில் கீழே 120 முதல் 150 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. தோட்டக்கலை துறையின் அறிவிப்பின்படி மே மாதத்தின் கடைசி வாரத்தில் மால்டா மாம்பழங்களின் விற்பனையானது ஆரம்பிக்கும். அதிலிருந்து ஜூன் முதல் மாதம் வரை அவற்றின் விற்பனை விகிதம் வரிசையாக நடைபெறும். குறிப்பாக மால்டா மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்தில் தான் மாம்பழத்திற்கான சீசனே ஆரம்பிக்கிறது.
ஆனால் மற்ற தென்னிந்திய பகுதிகளில் விளைவிக்கும் மாம்பழங்கள் டிசம்பர் மாதத்திலேயே சந்தைக்கு வந்து விடுகின்றன. பெரிய அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பபடுகின்றன. தங்களுக்கு மால்டாவில் விளைந்த மாம்பழங்கள் கிடைக்கவில்லை என்றாலும் மற்ற மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மாம்பழங்களை மக்கள் மிகவும் ஆர்வமுடன் விரும்பி சாப்பிடுகின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hyderabad