ஆந்திர மாநிலத்தில் கதவைப் பூட்டிக்கொண்டு ராமர் கோவிலுக்குள் காதல் ஜோடிகள் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மசூலிப்பட்டினம் அருகே புத்தாளபாளையம் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக செயலகத்தில் வேலை செய்யும் நாகராஜு, காயத்ரி ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர்.
காயத்ரியின் தந்தை காவல்துறையில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்று வருகின்றார். மேலும், இரண்டு பேரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள். இதனால் இவர்களுடைய காதலுக்கு இருவீட்டாரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெண் வீட்டார் தரப்பில் இருந்து எதிர்ப்பு மிகவும் கடுமையாக இருந்துள்ளது.
இதனால் காதல் ஜோடிகள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இதனையடுத்து புத்தாளபாளையம் கிராமத்தில் உள்ள கோதண்டராமர் கோவிலுக்குத் திருமணம் செய்துகொள்ள மாலை, தாலியுடன் வந்துள்ளனர்.
இருவீட்டாரினால் ஆபத்து ஏற்படும் என்று கருதிய இருவரும், கோவிலுக்குள் புகுந்து கேட்டை இழுத்துமூடி பூட்டு போட்டுவிட்டு, மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
Also Read : தூக்கு தண்டனைக்கு மாற்று வழியைக் கண்டறிய நிபுணர் குழு... மத்திய அரசு தகவல்..!
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காதல் ஜோடிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு பேரையும் வெளியில் வரவழைத்துக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதனைத்தொடர்ந்து, இரண்டு பேரின் பெற்றோர்களையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்து, திருமணம் செய்து கொண்ட இரண்டு பேரும் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள். ஆகையால் அவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று அறிவுரை கூறி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர் - புஷ்பராஜ்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, Love marriage