முகப்பு /செய்தி /இந்தியா / நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் கலை மன்றம் - விளக்கேற்றி திறந்துவைத்த கோகிலாபென் திருபாய் அம்பானி

நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் கலை மன்றம் - விளக்கேற்றி திறந்துவைத்த கோகிலாபென் திருபாய் அம்பானி

கோகிலாபென் திருபாய் அம்பானி

கோகிலாபென் திருபாய் அம்பானி

இந்திய கலைகளை வளர்ப்பதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் கலைஞர்களை அங்கீகரிக்கவும் மும்பையில் பிரம்மாண்டமாக 'நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் தொடங்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் மையத்தில் நீடா முகேஷ் அம்பானியின் கல்சுரல் சென்டரின் பிரமாண்டமான திறப்பு விழா இன்று நடைபெற்றது. இது நீடா அம்பானியின் கனவுத் திட்டம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து 3 நாட்கள் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன.

இந்த கலாச்சார மையம் குறித்து நீடா அம்பானி தெரிவித்ததாவது, “இந்த கலாச்சார மையம் இந்தியாவின் சிறந்த விஷயங்களை உலகிற்குக் காண்பிக்கவும் உலகின் சிறந்தவற்றை இந்தியாவுக்கு வரவேற்பதற்கான ஒரு இடமாகவும் இருக்கும்” என்று பேசினார். 4 அடுக்குகள் கொண்ட கட்டடத்தில், 2000 இருக்கைகள் கொண்ட திரையரங்கம், நவீன ஸ்டுடியோ, கலை நிகழ்ச்சிகளுக்கான அரங்கம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. பிரம்மாண்டமாக நடைபெற்ற இதன் தொடக்கவிழாவில் நீடா அம்பானி நடனம் ஆடி விருந்தினர்களை வரவேற்றார்.

இந்த விழாவில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, நடிகர் ரஜினிகாந்த், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், யுவராஜ் சிங், திரைத்துறை பிரபலங்கள் ஆமிர் கான், ஆலியா பட், வித்யா பாலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்திய கலைகளை வளர்ப்பதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் கலைஞர்களை அங்கீகரிக்கவும் மும்பையில் பிரம்மாண்டமாக 'நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் தொடங்கப்பட்டுள்ளது.

top videos

    இந்த நிலையில் நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தில் கலை மன்றத்தை (The Art House) கோகிலாபென் திருபாய் அம்பானி விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த கலை மன்றத்தில் சங்கம் என்ற இந்திய மாறுபட்ட கலாச்சாரங்களை கொண்டாடும் விதமாக கண்காட்சியும் இடம்பெற்றுள்ளது.

    First published:

    Tags: Mukesh ambani, Nita Ambani