தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு, சிறு வயதில் தனது தந்தையால் தனக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து மனம் திறந்தார்.
நெட்வொர்க்18-ன் ரைசிங் இந்தியா மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பேசிய பாஜகவின் குஷ்பு, தனக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளியில் சொன்னால் தனது தாய் பாதிக்கப்படுவார் என மிரட்டப்பட்டதாகக் கூறினார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்கள் வெளிவருவது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி பேசிய அவர், ‘என் மீது நிறைய பொறுப்புகள் இருந்தன, அது என்னைப் பேச அனுமதிக்கவில்லை. நான் அதைப் பற்றி யாரிடமும் சொல்லவும் இல்லை. என் குடும்பம்- என் அம்மா மற்றும் மூன்று சகோதரர்கள் என அவர்கள் அனைவரும் எனக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியாதவர்கள். என் அம்மா குடும்ப வன்முறைக்கு ஆளானதை நான் கண்டேன். இதைப் பற்றி யாரிடமாவது பேசினால், என் அம்மாவும், சகோதரர்களும் கடுமையாகப் பழிவாங்கப்படுவார்கள் என்று மிரட்டப்பட்டேன். அந்த பயம் என்னை பேசவிடாமல் தடுத்தது. ஆனால், இது நிறுத்தப்பட வேண்டும் என்று நினைக்கும் நேரம் எப்போதும் வெகு தூரம் இருக்காது’ என குஷ்பு தெரிவித்தார். தனது தந்தைக்கு எதிராக தான் போராட தொடங்கியபோது, தன் குடும்பத்தை அவர் விட்டுச்சென்று விட்டதாக குஷ்பு கூறினார்.
இம்மாத தொடக்கத்தில், சிறு வயதில் தனக்கு நிகழ்ந்த கொடுமை குறித்து மனம் திறந்த நடிகை குஷ்பு, தனது தாய் மிகவும் கொடுமையான திருமண நாட்களை கடந்து வந்ததாகவும், ஒரு ஆண், தான் ஆண் என்பதால் தனது மனைவியையும், குழந்தைகளையும் அடித்து, தனது ஒரே மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யலாம் என நினைத்துள்ளார். அது தனது பிறப்புரிமை என்றும், ஒரு மனிதனாக இருந்து அவ்வாறு செய்வது தனது உரிமை என்றும் அவர் நினைத்துள்ளார் என தனது ஆதங்கத்தை குஷ்பு வெளிப்படுத்தினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.