முகப்பு /செய்தி /இந்தியா / நீதிமன்றத்தில் சுடிதார் அணிய அனுமதி வேண்டும்... கேரள பெண் நீதிபதிகள் கோரிக்கை...!

நீதிமன்றத்தில் சுடிதார் அணிய அனுமதி வேண்டும்... கேரள பெண் நீதிபதிகள் கோரிக்கை...!

கோப்புப் படம்

கோப்புப் படம்

53 ஆண்டுகால ஆடை விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என 100க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் கேரளாவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Last Updated :
  • Kerala, India

1970ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி நீதிபதிகளின் ஆடை விதிகள் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, ஆண் நீதிபதிகள் கருப்பு நிற ஓபன் காலர் கோட், வெண்ணிற சட்டை, வெண்ணிற கழுத்துப் பட்டையுடன், மேலங்கி அணிய வேண்டும்.

அதேபோல, பெண் நீதிபதிகள் மிதமான நிறத்திலான பிராந்திய ஆடை, மேலங்கி மற்றும் வெண்ணிற கழுத்துப் பட்டை அணிய வேண்டும். 53 ஆண்டுகளாக பின்பற்றப்படும் இந்த ஆடை விதிகளில் மாற்றம் கொண்டுவர கோரி கேரளாவில் 100க்கும் மேற்பட்ட பெண் நீதிபதிகள் அம்மாநில உயர் நீதிமன்ற பதிவாளரை நாடியுள்ளனர்.

இந்த ஆடை முறை அசவுகரியங்களை அவர்கள் எடுத்துரைத்துள்ளனர். குறிப்பாக கோடை காலங்களில் நெரிசல் மிகுந்த கோர்ட்டுகளில் இவ்வாறு இறுக்கமாக ஆடைகளுடன் பல மணிநேரம் அமர்வது சிரமமாக உள்ளது, மின் தடை ஏற்படும்போது வியர்த்து வழிய வேண்டியுள்ளது என மனக்குறையை கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: பாலியல் தொழிலில் ஈடுபடுவது குற்றம் அல்ல.. நீதிமன்றம் பரபரப்பு கருத்து... பின்னணி என்ன?

மேலும், தெலங்கானா உயர் நீதிமன்றம் 2021 மார்ச் 15ஆம் தேதி வெளியிட்ட சுற்றறிக்கையும் உதாரணம் காட்டியுள்ளனர். அந்த சுற்றறிக்கையில், பெண் நீதிபதிகள் பணியின் போது சேலை மட்டுமல்லாது, சல்வார், சுடிதார், நீளமான பாவாடை, பேண்ட் போன்றவை அணியலாம் என்றுள்ளது. எனவே, தெலங்கானா போலவே தங்கள் மாநிலத்திலும் சுடிதார் அணிய அனுமதி வேண்டும் என நீதிபதிகள் கோரியுள்ளனர். இதை கேரளா உயர் நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ள போவதாக தெரிவித்துள்ளது.

First published:

Tags: Dress code, Judge, Kerala