முகப்பு /செய்தி /இந்தியா / பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை... ஓடிச் சென்று காப்பாற்றிய போலீஸ்... நெகிழ்ச்சி வீடியோ..!

பக்கெட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பச்சிளம் குழந்தை... ஓடிச் சென்று காப்பாற்றிய போலீஸ்... நெகிழ்ச்சி வீடியோ..!

ஓடிச் சென்ற போலீஸ்

ஓடிச் சென்ற போலீஸ்

Kerala new born baby rescue | கழிவறை வாளிக்குள் உயிருடன் இருந்த குழந்தையை போலீசார் விரைந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில் பச்சிளங் குழந்தையை வாளிக்குள் உயிருடன் இருந்த குழந்தையை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கேரள மாநிலம் , ஆறன்முள பகுதியை சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் தனது தாயுடன் செங்கன்னூர் தனியார் மருத்துவமனையில் அதிக ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது அவர் தனக்கு குறை மாதத்தில் குழந்தை பிறந்து இறந்துவிட்டதால் கழிவறையில் வீசிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இருவரின் நடத்தையில் சந்தேகமடைந்த மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக செங்கன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் உடனடியாக பெண்ணின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது குழந்தை வாளிக்குள் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அதனை எடுத்து பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஒருவர் தொடுவதை உணர்ந்த குழந்தை அழுக தொடங்கியது. குழந்தை உயிரோடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக வாளியோடு சேர்த்து குழந்தையை தூக்கி சென்று ஓடோடி மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சை நடைபெற்று வருகிறது.  மேலும், குழந்தையை பாதுகாக்க குழந்தைகள் நலத்துறைக்கு அரசு உத்தரவிட்டது.

top videos

    விசாரணையில் முறையற்ற உறவின் மூலம் குழந்தை பிறந்ததால் வீட்டிலேயே பிரசவித்து மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குழந்தையை போட்டு வந்த பெண் மற்றும் அவரின் தாயார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாளிக்குள் உயிருடன் இருந்த பிஞ்சு குழந்தையை விரைந்து சென்று காப்பாற்றிய போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    First published:

    Tags: Baby, Kerala