கர்நாடகாவில் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் காரை நிறுத்தித் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்துள்ளனர்.
கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நிலையில், பணப்பட்டுவாடா மற்றும் தேர்தல் முறைகேடுகளைத் தடுக்க தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
முந்தைய தேர்தல்களைவிட தற்போது அதிகளவில் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பெங்களூருவில் தொட்டபல்லாபுராவில் உள்ள சுப்பிரமணியர் கோயிலுக்கு முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சென்றார். செல்லும் வழியில் திடீரென முதலமைச்சரின் காரை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரை சோதனையிட்ட அதிகாரிகள், ஆட்சேபனைக்குரிய பொருட்கள் எதுவும் கண்டறியப்படாததால், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தொடர்ந்து பயணிக்க அனுமதித்ததாகக் கூறப்படுகிறது. முதலமைச்சரின் வாகனம் தேர்தல் பறக்கும் படையால் நிறுத்தப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பேசுபொருளாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.