முகப்பு /செய்தி /இந்தியா / வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளது... மக்களுக்கு நன்றி - ராகுல் காந்தி நெகிழ்ச்சி

வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளது... மக்களுக்கு நன்றி - ராகுல் காந்தி நெகிழ்ச்சி

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவில் வெறுப்பு அரசியல் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 224 இடங்களில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை. காங்கிரஸ் 136 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக 63 தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் இருந்துவருகிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் 21 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்துவருகிறது.

பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். காங்கிரஸ் கட்சி ஆட்சியமைப்பது உறுதியான நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்து மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துவருகின்றனர்.

இந்தநிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘கர்நாடகாவில் வெற்றியைத் தந்த மக்களுக்கு நன்றி... ஏழை மக்களின் சக்தி வெற்றி பெற்றுள்ளது. கர்நாடகாவில் வெற்றியை பெற கடின உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்த தொண்டர்களுக்கும், கட்சித் தலைவர்களுக்கும் நன்றி.. இந்த வெற்றி எல்லா மாநிலத்திலும் தொடரும்.

கர்நாடகாவில் பாஜகவுக்கு பின்னடைவு... அமித்ஷா அவசர ஆலோசனை..!

அவதூறான மொழியைப் பேசி நாங்கள் சண்டையிடவில்லை. நாங்கள் கர்நாடகா மாநிலத்தின் ஏழைகளுக்காக சண்டையிட்டோம். வெறுப்பு அரசியல் கர்நாடகாவில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் அன்பு வெற்றி பெற்றுளது. காங்கிரஸ் கட்சி அளித்த ஐந்து வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்படும்’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: Karnataka Election 2023