இந்தியாவில் கொரோனாவால் ஒரே நாளில் புதிதாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
புதிதாக 9 ஆயிரத்து 629 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனா பாதிப்புக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர். பெருந்தொற்றில் இருந்து புதிதாக 11 ஆயிரத்து 967 பேர் மீண்டுள்ளனர். ஒருநாள் கொரோனா பாதிப்பு 5 புள்ளி 38 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 61ஆயிரத்து 103 ஆக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால், தடுப்பூசி செலுத்திக்கொள்வோரின் எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 5 ஆயிரத்து 407 பேர் புதிதாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: CoronaVirus, Covid-19, India