ஹிஸ்டரி டிவி-18 தயாரித்த, கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கப்பட்டதிலிருந்து மக்களுக்கு செலுத்தப்பட்டது வரையிலான நிகழ்வுகளை விவரிக்கும் ‘தி வயல்’ (The Vial) என்ற 60 நிமிடங்கள் ஓடும் ஆவணப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.
உலக அளவில் மிகப்பெரிய கொரோனா தடுப்பு மருந்து வழங்கும் திட்டமாக இந்தியாவின் கொரோனா தடுப்பு வழங்கல் இருந்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு இதனை எப்படி சாதித்தது என்பது ஆச்சர்யமானது. கொரோனா பாதிப்பு நேரத்தின்போது உலகத்திற்கே தடுப்பூசிகளை வழங்கி இந்தியா அளப்பரிய உதவிகளை உலக நாடுகளுக்கு செய்தது. பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கும் பலன் அளித்தன.
அந்த வகையில் கொரோனா தடுப்பூசி மருந்தின் பயணத்தை ஆவணப்படுத்தும் நோக்கில் ‘தி வயல்’ என்ற ஆவணப் படத்தை ஹிஸ்டரி டிவி 18 சேனல் உருவாக்கியுள்ளது. இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்தி திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் மனோஜ் பாஜ்பாய் இந்த ஆவணப்படத்தில் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு குறித்து விவரிக்கிறார். முதன் முறையாக பிரதமர் மோடியின் பேச்சை உள்ளடக்கியதாக இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தி வயல் ஆவணப்படம் மார்ச் 24 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கொரோனா தடுப்பூசி மருந்துகள் செயல்பட்ட விதம் குறித்து மக்கள் பரலாக அறிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்த ஆவணப்படத்தில் மருந்து எப்படி உருவாக்கப்பட்டது. ஆராய்ச்சியின்போது ஏற்பட்ட சவால்கள் உள்ளிட்டவற்றை பேசுகிறது. இந்த ஆவணப்படத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்ட முக்கிய நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அதார் பூனவல்லா, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ஆகியோரின் பேட்டிகளும் இடம்பெற்றுள்ளன.
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட கால வரிசைப்படி ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. புனே தேசிய வைரலாஜி நிறுவனத்தில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டது முதல் கோடிக்கணக்கான வயல்கள் (மருந்து குப்பிகள்) உற்பத்தி செய்யப்பட்டது வரை அனைத்தும் இதில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து மனோஜ் பாஜ்பாய் கூறியதாவது, “இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் சிறப்பு சேர்க்கும் வகையில் இந்த ஆவணப்படத்தை ஹிஸ்டரி டிவி 18 உருவாக்கியுள்ளது. இந்த ஆவணப்படத்தை எண்ணி ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டும். கொரோனாவின்போது முன் களத்தில் நின்று போராடிய மருத்துவ பணியாளர்கள், உயிர் நீத்தவர்களுக்கு இந்த ஆவணப்படம் சமர்ப்பணம். அவர்களும் மருத்துவ விஞ்ஞானிகளும் சவால்களை ஏற்றுக் கொண்டு தடுப்பூசிகளை கண்டுபிடித்ததால்தான் இன்றைக்கு நாம் வீட்டை விட்டு வெளியே வருகிறோம்” என்று தெரிவித்தார்.
எளிதில் அணுக முடியாத இடத்தில் இருப்பவர்களுக்கும், அசாதாரண இடங்களில் வசிப்பவர்களுக்கும் மத்திய அரசு கடும் முயற்சி மேற்கொண்டு கொரோனா தடுப்பு மருந்துகளை சேர்த்தது. அவையும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இன்றைக்கு 130 கோடி பேர் கொரோனா தடுப்பு மருந்து முதல் டோஸை செலுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் 100 நாடுகளுக்கு சுமார் 23.24 கோடி மருந்து குப்பிகளை இந்தியா வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Covid-19, Documentary films