மத்தியில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், ஜி.எஸ்.டி. அமைப்பு முறையில் மாற்றம் செய்யப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள ராம்துர்க் என்ற இடத்தில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி பரப்புரை மேற்கொண்டார். அப்போது, பேசிய அவர், நாட்டில் உள்ள பணக்காரர்களுக்கு ஆதரவாகவே ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டதாக குற்றம்சாட்டினார்.
'40% Commission BJP Sarkara' is the most corrupt government ever!
Congress winning 150 seats is guaranteed and corrupt BJP will be reduced to 40 seats. pic.twitter.com/8S0PUOxWmr
— Rahul Gandhi (@RahulGandhi) April 23, 2023
ஜி.எஸ்.டி. தாக்கல் செய்யும் முறை பெருவாரியான மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறிய அவர், இதனால் சிறு வணிகர்கள் கடுமையான பாதிப்பை சந்திப்பதாக விமர்சித்தார்.
இதையும் வாசிக்க: “தெலங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து... ” - அமித் ஷா அதிரடி..!
நாட்டின் கோடீஸ்வர்களை மட்டுமே கவனத்தில் கொண்டு, தற்போதையை ஆட்சி நடைபெறுவதாக ராகுல் காந்தி விமர்சித்தார். மேலும் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யாத மத்திய அரசு, பணக்காரர்களின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்ததாகவும் ராகுல் குற்றம்சாட்டினார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Rahul Gandhi