முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டால் திறம்பட பணியாற்றுவேன் என பட்டியல் இனத் தலைவர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் 135 இடங்களை காங்கிரஸ் கட்சி வென்றுள்ள நிலையில், சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இடையே யார் முதலமைச்சர் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இருவரும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை தனித்தனியே சந்தித்து பேசினார். அப்போது, முதலமைச்சர் பதவி இல்லாவிடில், சாதாரண எம்.எல்.ஏ.வாக மட்டுமே இருப்பேன் என சிவக்குமார் கூறியதாகத் தெரிகிறது.
அதேநேரத்தில் கட்சியின் வளர்ச்சிக்காக பங்காற்றாத சித்தராமையா, முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் என தொடர்ந்து பதவியில் இருந்து வருவதாகவும் சிவக்குமார் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, சித்தராமையா தனது ஆட்சிக்கால சாதனைகளை பட்டியலிட்டு மனுவாக கார்கேவிடம் வழங்கியதாகத் தெரிகிறது.
இருவரும் முதலமைச்சர் பதவியை கேட்பதால், கார்கே மிக நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக நேற்று அவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தினார். மாலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபாலுடனும் ஆலோசித்தார். மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேணுகோபால் விரைவில் முதலமைச்சர் அறிவிக்கப்படுவார் என்றார்.
மேலும் படிக்க... ‘தி கேரளா ஸ்டோரி’ படத்திற்கு வரவேற்பு இல்லை... உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்...!
இதனிடையே தனக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டால் திறம்பட பணியாற்றுவேன் என பட்டியல் இனத் தலைவர் பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். முன்னாள் துணை முதலமைச்சரான பரமேஸ்வராவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் தும்கூருவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Congress, Karnataka congress