முகப்பு /செய்தி /இந்தியா / பாஜகவில் இருந்து விலகுகிறேன்... கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவிப்பு

பாஜகவில் இருந்து விலகுகிறேன்... கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் அறிவிப்பு

ஜெகதீஷ் ஷட்டர்

ஜெகதீஷ் ஷட்டர்

இன்று சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளதாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்தார்.

  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் மூத்த தலைவர்களுக்கும், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலருக்கும் பாஜக மீண்டும் சீட் வழங்கவில்லை. இதனால், கடந்த சில வாரங்களாக தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்து வந்த ஜெகதீஷ் ஷெட்டர், தனக்கு வாய்ப்பு வழங்காவிட்டாலும், தனித்து போட்டியிடுவேன் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பிரகலாத் ஜோஷி ஆகியோர் ஜெகதீஷ் ஜெட்டரின் இல்லத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையும் படிங்க: மாபியா கும்பல் தலைவன் போலீசார் கண்முன்னே சுட்டுக் கொலை...144 தடை உத்தரவு... உ.பி.யில் பரபரப்பு!

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி பணியாற்றிய தன்னை, பாஜக நடத்திய விதம் வேதனை அளிப்பதாக கூறினார். தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ தனது ஹூப்ளி-தர்வாட் தொகுதியில் நிச்சயம் போட்டியிடுவேன் எனக்கூறிய அவர், இன்று சபாநாயகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.

top videos
    First published:

    Tags: BJP, Karnataka Election 2023