டெல்லியில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவளிக்கச் சென்ற விவசாயிகள், காவல்துறையினர் அமைத்த தடுப்புகளை தகர்த்தெறிந்து முன்னேறியதால் பரபரப்பு நிலவியது.
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் இணைந்துள்ளனர். விவசாய அமைப்பினர் தங்கள் ஆதரவை நேற்று தெரிவித்திருந்தனர்.
இரவில் மெழுகுவர்த்தியை ஏந்தியும் அவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த சூழலில் ஏராளமான விவசாயிகள் டெல்லியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்களை தடுக்கும் வகையில், காவல்துறையினர் தடுப்புகளை அமைத்தனர். அந்த தடுப்புகளை விவசாயிகள் தூக்கி வீசிவிட்டு, டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி சென்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Delhi, Farmers Protest