நிச்சயமற்ற தன்மை, வளமான நிலப்பரப்புகள் குறைந்து வருதல், விவசாய விளைபொருட்கள் விலைகளில் அதிக ஏற்ற இறக்கங்கள் போன்றவை வேளாண் தொழிலை மிகவும் சவாலானதாக ஆக்கியுள்ளது.
குறிப்பாக நிலையற்ற பொருளாதார சூழலில் விவசாயத்தை அதிக லாபம் ஈட்டுவதற்காக, நாடு முழுவதும் சில விவசாயிகள் புதுவிதமான பயிர்களை அறிமுகப்படுத்தி புதிய சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படித்தான், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு விவசாயி கறுப்பு கோதுமையை உற்பத்தி செய்துள்ளார். அப்பகுதியில் மட்டுமே அவ்வாறு செய்தார்.
அராவி தாலுகாவின் கீழ் வரும் வார்தா மாவட்டத்தில் உள்ள ஜல்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் தாபர் என்ற விவசாயி. இவர் இந்த பகுதிகளில் இல்லாத வகையில் கருப்பு கோதுமையை வளர்ப்பது வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில், கறுப்பு கோதுமை வளர்ப்பு முறை சாதாரண கோதுமையை வளர்ப்பதைப் போன்றது தான். ஒரு ஏக்கர் நிலத்தில் 40 கிலோ விதை விதைக்கப்பட்டு, இறுதி விளைபொருளாக, 18 குவிண்டால் கறுப்பு கோதுமை அறுவடை செய்யப்படுகிறது.
மொஹாலியில் உள்ள நேஷனல் அக்ரி-ஃபுட் பயோடெக்னாலஜி இன்ஸ்டிட்யூட்டில் உள்ள வேளாண் விஞ்ஞானி டாக்டர் மோனிகா கார்க் என்பவரால் கருப்பு கோதுமை ஏழு வருட ஆராய்ச்சியின் பலனாக உருவாக்கப்பட்டது. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் இந்த கோதுமைக்கு மாரு கெஹூன் என்றும், தேசிய வேளாண் உணவு உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (NABI) NABI MG என்றும் பெயரிட்டுள்ளது. கருப்பு கோதுமையில் அதிக நார்ச்சத்து உள்ளது மற்றும் புற்றுநோய், உடல் பருமன் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களை நிறுத்தவும் இது பயனுள்ளதாக இருக்கும். சாதாரண கோதுமையை விட இதில் அதிக சத்துக்கள் உள்ளன.
சயின்ஸ் டைரக்ட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையின்படி, கருப்பு கோதுமை அதிக புரதம், உணவு நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் கே, ஃபிளாவனாய்டு மற்றும் மொத்த பீனாலிக் உள்ளடக்கம் (TPC) மற்றும் மஞ்சள் கோதுமையுடன் ஒப்பிடும்போது ஆக்ஸிஜனேற்ற செயல்முறையை அதிகரிக்கிறது.
இந்த கோதுமை இதய நோய், புற்றுநோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் ஆகியவற்றை தடுக்கும் தன்மை கொண்டது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சாதாரண கோதுமையை விட நான்கு மடங்கு அதிக விலை கொண்ட கருப்பு கோதுமை கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கருப்பு கோதுமை மாவு கிலோ ரூ.125 முதல் ரூ.130 வரை கிடைக்கிறது.
இதையும் படிங்க: வண்ண மலர்களால் மூழ்கிய ஜம்மு காஷ்மீர்.. துலிப் தோட்டத்தில் கலைகட்டிய சீசன்..!
இதுகுறித்து மாவட்ட வேளாண்மை அலுவலர் வித்யா மேனகர் கூறியதாவது, அரவி தாலுகாவில் சில விவசாயிகள் இந்த கோதுமை ரகத்தை விதைத்து பயிரிட்டாலும், அவர்களால் இந்த ரகத்திற்கு விதையை தாங்களே தயார் செய்ய முடியவில்லை. எனவே, விவசாயிகள் விதைகளை சந்தையில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். இந்த கருப்பு கோதுமை விதைப்பதற்கு குறைந்த பரப்பளவு தேவைப்படும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Farmer, Maharashtra, Wheat