திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நடைபாதை வழியாகப் பாதயாத்திரைக்குச் செல்லும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன அனுமதி இன்று முதல் அளிக்கப்படுகிறது.
திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களில் நடந்து மலையேறிச் சென்று ஏழுமலையானை வழிபடும் பக்தர்களுக்கு முன்னுரிமை ஏற்பாடாக திவ்ய தரிசனம் என்ற பெயரில் சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதன்படி திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிப்பிரி, ஸ்ரீனிவாச மங்காபுரம் அருகில் உள்ள ஸ்ரீவாரி மெட்டு ஆகிய நடைபாதைகள் வழியாகப் பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு இடையில் சாமி தரிசனத்திற்கு உரிய டோக்கன்கள் வழங்கப்படும்.
அலிப்பிரி நடைபாதை வழியாகச் செல்லும் பக்தர்களுக்குத் தினமும் பத்தாயிரம் டோக்கன்களும், ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாகச் செல்லும் பக்தர்களுக்கு தினமும் ஐந்தாயிரம் டோக்கன்களும் வழங்கப்பட்டு வந்தன.
கொரோனாவிற்கு முன் இருந்த இந்த நடைமுறை பின்னர் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப இன்று முதல் மீண்டும் பாதயாத்திரையாகச் செல்லும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பக்தர்கள் ஆர்வத்துடன் திவ்ய தரிசன டோக்கன்களை பெற்று கோவிலுக்குச் சென்று ஏழுமலையானை வழிபட்டுச் செல்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Tirupati