டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவின் நீதிமன்றம காவல் மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவை கடந்த 26 ஆம் தேதி சிபிஐ கைது செய்தது. இவ்வழக்கில் திஹார் சிறையில் இருந்த மணிஷ் சிசோடியாவை பணபரிமாற்ற மோசடி வழக்கில் அமலாக்கத்துறையும் கைது செய்தது.அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மணிஷ் சிசோடியாவின் காவல், 22 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள ரோஸ் அவன்யூ நீதிமன்றத்தில், மணிஷ் சிசோடியாவை அமலாக்கத்துறையினர் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தினர்.இதில், சிசோடியாவின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மணிஷ் சிசோடியாவின் ஜாமின் மனு மார்ச் 21 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aam Aadmi Party, Delhi