கர்நாடகாவில் தேர்தல் பிரச்சார பேரணியின் போது காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் பொதுமக்கள் மீது 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு மாண்டியாவில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பேரணியில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் கலந்து கொண்டார். பெவினஹள்ளி அருகே பிரச்சாரம் மேற்கொண்டபோது பிரச்சார வாகனத்தின் மேல் நின்றவாறு, அங்கு வரவேற்பளிப்பதற்காக கலைநிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தவர்கள் மீது 500 ரூபாய் நோட்டுகளை வீசினார்.
Also Read : மே 10ஆம் தேதி கர்நாடகாவில் ஒரே கட்டமாக தேர்தல்..!
இதனால், அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்களும், பொதுமக்களும் முட்டி மோதி அந்தப் பணத்தை எடுத்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ரூபாய் நோட்டுகளை வீசுவதன் மூலம் டி.கே சிவக்குமாரும், காங்கிரஸ் கட்சியினரும் கர்நாடக மக்களை பிச்சைக்காரர்கள் என்று நினைப்பதாகவும், இதே மக்கள் வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்டுவார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.