கேரளா மாநிலம் கொச்சி அருகே கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கடற்படை விமானி உள்பட மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.
நெடும்பசாரி விமானநிலையத்தில் கடற்படைக்குச் சொந்தமான ஏ.எல்.ஹெச் துருவ் மார்க் 3 ஹெலிகாப்டரை சோதனை செய்யும் பணி நடைபெற்று வந்தது. ஹெலிகாப்டர் சுமார் 25 அடி உயரத்தில் இருந்து பறந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது.
விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. விமான நிலையத்தில் விபத்து நடைபெற்ற தளம் தற்காலிகமாக மூடப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Helicopter, Helicopter Crash, Kochi