ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பென்னோபிலம் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பிரமாண்டமான தேர் சரிந்து விழுந்து உடைந்தது.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் இன்னும் 12 நாட்களில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ நாட்களில் லட்சுமி நரசிம்ம சுவாமி பலவேறு வாகங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். அப்போது ஒரு நாள் தேரோட்டமும் நடைபெறும். தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக கோயிலில் திருட்டு தேரை மராமத்து செய்யும் பணிகள் நடை பெற்று வந்தன.
இந்நிலையில், நேற்று திடீரென தேர் சரிந்து விழுந்து உடைந்தது. மிகவும் பழமையான தேர் ஆகையால் அதில் உள்ள மர பாகங்கள் வலுவிழந்த காரணத்தால் தேர் சரிந்து விழுந்திருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் : புஷ்பராஜ் - திருப்பதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, India, Local News