நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சராசரியாக 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு ஒரு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதில், வாகனங்களுக்கு ஏற்ப, நிர்ணயிக்கப்பட்ட தொகை வசூலிக்கப்படும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.
கட்டணம் செலுத்த Fastag முறை நடைமுறையில் உள்ளபோதும், சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதும், அதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையும் தொடர்ந்து வருகிறது. இதனைத் தவிர்க்கும் வகையில், புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகம் செய்யவுள்ளது.
இதற்காக, தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ச்சியாக கேமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இதன் மூலம், தானியங்கி முறையில் வாகனங்களின் நம்பர் பிளேட்களை ஸ்கேன் செய்து, பயணம் செய்த தொலைவு கணக்கிடப்படவுள்ளது.
Also Read : 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த LVM3-M3 ராக்கெட்..!
பின்னர், சாலையில் பயணம் செய்ததற்காகத் தொகை மட்டும் Fastag மூலம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முதற்கட்டமாக, 29 கிலோ மீட்டர் நீளம் கொண்ட டெல்லி - குருகிராம் விரைவுச் சாலையில், இன்னும் 6 மாதத்திற்குள் இந்த புதிய நடைமுறை செயல்பாட்டுக்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fastag, Toll gate, Toll Plaza