முகப்பு /செய்தி /இந்தியா / தேஜஸ்வி யாதவை 8 மணி நேரம் விசாரித்த சிபிஐ அதிகாரிகள்..!

தேஜஸ்வி யாதவை 8 மணி நேரம் விசாரித்த சிபிஐ அதிகாரிகள்..!

தேஜஸ்வி யாதவ்

தேஜஸ்வி யாதவ்

ரயில்வே பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவிடம் சிபிஐ அதிகாரிகள் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.

  • Last Updated :
  • Delhi, India

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை மத்திய  ரயில்வே துறை அமைச்சராக இருந்த லாலு பிரசாத் யாதவ், ரயில்வே பணியில் சேர விரும்புவோர், தங்களது சொத்துகளை எழுதி தர வேண்டும் என்று நிர்ப்பந்தித்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக, லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, அவர்களது மகள் மிசா பாரதி, மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து, அவர்களது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்தது. அதன்படி, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் விசாரணை நடத்த சிபிஐ சம்மன் அனுப்பியது.

இதையும் படிக்க :  “பாஜக பேட்ஜ் அணிந்துகொண்டு கேள்வி கேளுங்கள்”... செய்தியாளரை அவமதித்தாரா ராகுல்காந்தி..?

மூன்று முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத பீகார் துணை முதலமைச்சர்  தேஜஸ்வி யாதவ், நேற்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார். இதே வழக்கில், அவரது சகோதரி மிசா பாரதியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

8 மணிநேர விசாரணை முடிந்து சிபிஐ அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட தேஜஸ்வி யாதவ், ரயில்வே பணி நியமனத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும் கூறினார்.

First published:

Tags: Bihar, CBI, Corruption allegations, Lalu Prasad Yadav