முகப்பு /செய்தி /இந்தியா / திடீர் விபத்து..! ஆம்புலன்சில் படுத்தபடியே 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி.. வைரலாகும் வீடியோ..

திடீர் விபத்து..! ஆம்புலன்சில் படுத்தபடியே 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி.. வைரலாகும் வீடியோ..

ஆம்புலன்ஸில் தேர்வு எழுதும் மாணாவி

ஆம்புலன்ஸில் தேர்வு எழுதும் மாணாவி

எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவர்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்திய நிலையில் தேர்வில் பங்கேற்க விரும்பிய மாணவிக்கு பிரத்யேகமாக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது.

  • Last Updated :
  • Maharashtra, India

மகாராஷ்டிராவில் விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டபோதும், ஆம்புலன்சில் படுத்தபடியே மாணவி ஒருவர் தேர்வில் பங்கேற்று பலரையும் வியக்க வைத்துள்ளார்.

10ஆம் வகுப்பு படித்து வரும் முபாஷிரா சையத் என்ற அந்த மாணவி, கடந்த வெள்ளிக்கிழமை தேர்வு முடித்துவிட்டு வீடு திரும்புகையில் சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது கார் ஒன்று முபாஷிராவின் இடது கால் மீது ஏறி இறங்கியது.இதில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், இரண்டுவாரம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை நடந்த தேர்வில் பங்கேற்க விரும்பிய மாணவிக்கு பிரத்யேகமாக ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்சில் படுத்தபடியே மாணவி பதில் கூற, உதவியாளர் ஒருவர் தேர்வை எழுதினார். படிப்பு மீது மாணவிக்கு இருந்த தீராத ஆசை காண்போரை பாராட்ட வைத்து வருகிறது.  எதிர்காலத்தில் ஆசிரியையாக விரும்புவதாகவும் விபத்தில் சிக்கிய மாணவி முபாஷிரா தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Maharashtra, Public exams