உத்தரபிரதேசத்தில் 3 வயது சிறுவன் கடித்து குட்டி பாம்பு இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஃபரூக்காபாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூர் கிராமத்தில் முகமதாபாத் என்ற பகுதியில் தினேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். அவரின் மூன்று வயது சிறுவன் அக்சய் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த குட்டி பாம்பை சிறுவன் விளையாட்டாக எடுத்து கடித்துள்ளார். இதில் பாம்பு பரிதாபமாக உயிரிழந்தது. இதனை கண்ட அக்சயின் பாட்டி, உடனடியாக சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இறந்த பாம்பையும் பாட்டி உடன் எடுத்துச்சென்று மருத்துவர்களிடம் காட்டினார். சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அறிவித்ததுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Uttar pradesh