முகப்பு /செய்தி /இந்தியா / 6 மாதம் பழக்கம்... ஆன்லைன் நண்பரை நேரில் பார்க்க சென்ற 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

6 மாதம் பழக்கம்... ஆன்லைன் நண்பரை நேரில் பார்க்க சென்ற 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பீகார் மாநிலத்தில் 16 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக இளைஞர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Bihar, India

பீகாரின் பங்கா மாவட்டத்தின் தோரியா என்ற பகுதியைச் சேர்ந்தவர் நிதீஷ் குமார். இவருக்கும் அண்டை மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் 6 மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளம் மூலம் தொடர்ப்பு ஏற்பட்டுள்ளது. இவரும் ஆன்லைன் மூலம் பேசத் தொடங்கி நட்பாக பழகியுள்ளனர்.

அந்த சிறுமி பின்னர் அடிக்கடி நிதீஷ் குமாரிடம் பேசத் தொடங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த மார்ச் 16ஆம் தேதி அன்று தன்னை தனியாக நேரில் வந்து சந்திக்குமாறு சிறுமியை அழைத்துள்ளார். சிறுமியும் தனது பெற்றோரிடம் உண்மையை மறைத்து வேறு தோழியை பார்க்க செல்வதாகக் கூறி நிதீஷ் குமாரை பார்க்க அவரது ஊருக்கு சென்றுள்ளார்.

அப்போது நிதீஷ் குமாருடன் அவரது உறவுகார இளைஞர் சதாசிவ் மற்றும் நண்பர் விகாஸ் குமார் ஆகியோரும் உடன் வந்துள்ளனர். சிறுமியிடம் நயமாக பேசி தனியாக ஒரு இடத்திற்கு மூவரும் அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு பின்னர் அங்கிருந்து தப்பியோடினர்.

இதையும் படிங்க: 16 வயது கர்ப்பிணி சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற காதலன்.. பெற்றோரை சிறைபிடித்து அடித்த பகீர் சம்பவம்

பாதிக்கப்பட்ட சிறுமி தனது வீட்டிற்கு சென்று நடந்த உண்மையை கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, தோரியா காவல்நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அதன்பேரில் சிறுமியின் வாக்குமூலத்தை பெற்ற காவல்துறையினர் மூன்று இளைஞர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: Bihar, Crime News, Gang rape, Pocso