கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மனதின் குரல் என்ற பெயரில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வானொலி வாயிலாக உரையாற்றினர். இதற்கு நாட்டு மக்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுகிழமை பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி வானொலியில் ஒலிபரப்பாகிறது.
இதுவரை ஒலிபரப்பாகி உள்ள 99 அத்தியாயங்களில் தமிழ்நாடு குறித்தே பிரதமர் மோடி அதிகம் பேசி உள்ளார். இந்நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயத்தை நாட்டு மக்கள் இன்று கேட்க உள்ளனர். இதனை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்க ரஜினிகாந்த், இளையராஜா உட்பட பல்வேறு துறை சார்ந்த 200 பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதே போன்று தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலும் ஆளுநர் மாளிகையில், மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயத்திற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் உள்ள இந்தியா கேட்டில் மான் கி பாத்தின் 100 ஆவது தொகுப்பை விவரிக்கும் வகையில் சிறப்பு காட்சிகளுடன் வண்ண விளக்குகள் ஒளிர்ந்தன.
மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது தொகுப்பை சிறப்பிக்கும் வகையில், 100 ரூபாய் நாணயத்தை வெளியிட மத்திய நிதித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சி இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் புகழ்பெற்றுள்ளது. மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயத்தை அமெரிக்காவில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஒலிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திலும் மோடியின் 100 ஆவது மனதின் குரல் உரையை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ilayaraja, Mann ki baat, PM Modi, Rajini Kanth