பிரதமரின் 100வது மனதின் குரல் நிகழ்ச்சிக்கு சென்னை நடுக்குப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களையும் மீனவர்களையும் அழைப்பிதழ் வைத்து நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு பாஜக நிர்வாகிகள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் மக்களிடம் பேசுவது வழக்கம், அப்படி இதுவரை 99 முறை பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரையாற்றியுள்ளார். நூறாவது முறையாக அவர் பேச உள்ள நிகழ்ச்சி வரும் 30ஆம் தேதி நடைபெறுகிறது. இதை இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் பல்வேறு விதமான மக்களிடம் எடுத்துச் சென்று வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக மக்களை மனதின் குரல் வானொலி நிகழ்ச்சிக்கு அழைக்கும் விதமாக சென்னை கடற்கரை பகுதியாக இருக்கும் நடுக்குப்பம் பகுதியில் பாஜக நிர்வாகிகள் நாதஸ்வரம் தவில் கலைஞர்களின் இசை கருவிகள் இசைத்து திருமணத்திற்கு அழைப்பது போல் மீனவர்களையும் பொதுமக்களையும் வீடு வீடாக சென்று பத்திரிகை வைத்து அழைத்தனர்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, PM Modi, Tamil News