திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி கழிவறைகளைநகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ் பாபு திடீர் ஆய்வு செய்தார்.
நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவறைகள் பல நாட்களாக சுத்தம் செய்யப்படாததால் நோய் தொற்று ஏற்படுவதாக மாணவிகளிடமிருந்து புகார் வந்தது.
அதனைத்தொடர்ந்து நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கழிவறைகளை திடீர் ஆய்வு செய்தார். துப்புரவு அலுவலர்களை அழைத்து வந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினார். தினமும் இருமுறை சுத்தம் செய்து கிருமி நாசினிகள் தெளிக்கவும் ஒவ்வொரு இடைவேளை நேரத்திலும் சுத்தம் செய்ய வேண்டும் எனவும் நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேலும் பள்ளிக்கு தேவைப்படும் வசதிகள் குறித்து மனு கொடுக்குமாறும் பள்ளி ஆசிரியைகளை நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு கேட்டுக்கொண்டார்.
நாமக்கல்லில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் துவக்கம்..!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal