சிறப்பு வாய்ந்த அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் வைகாசி விசாக தேர்த்திருவிழா இறுதி நாளான இன்று சுவாமி திருமலைக்கு வழி அனுப்பி வைக்கும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வாணவேடிக்கை மற்றும் வழிநெடுகிலும் மலர்கள் தூவி உற்சாகத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் வைகாசி விசாக தேர் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 4ஆம் தேதி துவங்கி நான்காம் நாள் திருவிழா முதல் பதினான்காம் நாள் திருவிழா வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நிறைவு பெற்றது.
விழாவில் முக்கிய நிகழ்வான அர்த்தநாரீஸ்வரர் செங்கோட்டுவேலவர் ஆதிகேசவபெருமாள் திருத்தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வடம் பிடிக்கப்பட்டு நான்கு ரத வீதி வழியாக பவனி வரும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
திருவிழாவின் இறுதி நாளான சுவாமிகள் திருமலைக்கு திரும்பு நிகழ்வில் அர்த்தநாரீஸ்வரர் ஆதிகேசவபெருமாள் ஆகிய மும்மூர்த்திகளும் திருத்தேரில் இருந்து இறங்கி நகர வலம் வந்தனர்.
முன்னதாக பரிவார மூர்த்திகளுடன் கைலாசநாதர் கோயிலிருந்து சுவாமிகள் எழுந்தருளி நான்கு கால் மண்டபத்தில் பக்தி பரவசத்துடன் ஊஞ்சலாடி, அதன் பின் ருத்திராட்ச மண்டபத்தில் சுவாமிக்கு மாலை மாற்றி அதிகாலை இருள்பிரிய மக்கள் விடிய விடிய கண் முழித்து வானவேடிக்கை மற்றும் மலர்கள் தூவி திருமலைக்கு பக்தி பரவசத்துடன் வழி அனுப்பி வைத்தனர்.
செய்தியாளர்: மதன் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(Namakkal)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.