முகப்பு /நாமக்கல் /

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. இனி சேலம், நாமக்கல், ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள்!

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. இனி சேலம், நாமக்கல், ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள்!

ரயில்

ரயில்

Special trains | தென்னக ரயில்வேயின், சேலம் ரயில்வே கோட்டம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • Last Updated :
  • Namakkal, India

கர்நாடகா மாநிலம் ஹூப்ளி - காரைக்குடி சிறப்பு ரயில் (எண்.07389) இன்று முதல்வெள்ளிக்கிழமை 28ம் தேதி காலை 6.30 மணிக்கு ஹூப்ளியில் இருந்து புறப்பட்டு, 29ம் தேதி சனிக்கிழமை அதிகாலை 00.35 மணிக்கு காரைக்குடியை சென்றடையும்.

மறு மார்க்கத்தில் 29ம் தேதி சனிக்கிழமை மதியம் 12.10 மணிக்கு இந்த ரயில் (எண். 07390) காரைக்குடியில் இருந்து புறப்பட்டு, 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு ஹூப்ளி சென்றடையும்.

இந்த ரயில் ஹூப்ளியில் இருந்து வரும்போது ராணிபெண்ணூர், ஹரிஹார், தாவன்கரே, சிக்ஜாüஜூர், பிரூர், அர்சிகெரே, எஸ்எம்விடி பெங்களூர், கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் புதுக்கோட்டை ரயில் நிலையங்களில் நின்று செல்லும். ஹூப்ளி - காரைக்குடி செல்லும் ரயில் கர்நாடகா மாநிலம் ஹாவேரியிலும், காரைக்குடியில் இருந்து ஹூப்ளி செல்லும் ரயில் கராஜ்கியிலும் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயில் ஹூப்ளியில் இருந்து காரைக்குடி செல்லும்போது, சேலம் கோட்டத்தில், சேலம் ரயில் நிலையத்திற்கு 28ம் தேதி மாலை 6.45க்கு வந்து 6.55க்கு புறப்படும், நாமக்கல்லில் இரவு 7.44க்கு வந்து 7.45க்கு புறப்படும், கரூரில் இரவு 8.23க்கு வந்து 8.25க்கு புறப்படும்.

காரைக்குடியில் இருந்து ஹூப்ளி செல்லும் ரயில் 29ம் தேதி மாலை 3.28 மணிக்கு கரூர் வந்து 3.30க்கு புறப்படும். நாமக்கல்லில் மாலை 4.03 மணிக்கு வந்த 4.05 மணிக்கு புறப்படும், சேலத்திற்கு 4.50 மணிக்கு வந்து சேர்ந்த 5 மணிக்கு புறப்படும்.

இதையும் படிங்க | நாமக்கல் பாரம்பரிய மீட்பு திருவிழா.. அனைவரின் கவனத்தை ஈர்த்த நாட்டு மாடுகள் கண்காட்சி!

சேலம், ஈரோடு வழியாக சிறப்பு ரயில் :

கர்நாடக மாநிலம் அர்சிகெரே நகரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கேரள மாநிலம் கண்ணூர் வரை கோடை கால சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளை 28ம் தேதி மதியம் 12.15 மணிக்கு கர்நாடக மாநிலம் அர்சிகெரேயில் இருந்து கிளம்பும் இந்த ரயில் (எண்.06205) மறுநாள் சனிக்கிழமை மாலை 05.15 மணிக்கு கேரள மாநிலம் கண்ணூரை சென்றடையும்.

மறு மார்க்கத்தில் கன்னூரில் இருந்து 29ம் தேதி சனிக்கிழமை காலை 8 மணிக்கு புறப்படும் இந்த ரயில் (எண்.06206) மறுநாள் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு அர்சிகெரே சென்றடையும்.

அர்சிகெரேவில் இருந்து கிளம்பும் இந்த ரயில் தும்கூர், சிக் பனாவர், எஸ்எம்விடி பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், பாலக்காடு, ஷோரனூர், திரூர், கோழிக்கோடு, வடகரா மற்றும் தலச்சேரி வழியாக கன்னூரை சென்றடையும்.

இதையும் படிங்க | மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. கோடை விடுமுறையையொட்டி சிறப்பு ரயில் இயக்கம்!

அர்சிகெரேயில் வரும் இந்த ரயில் சேலம் கோட்டத்தில், சேலம் ரயில் நிலையத்திற்கு 28ம் தேதி மாலை 7.47 மணிக்கு வந்து 7.50 மணிக்கு புறப்படும், ஈரோட்டிற்கு இரவு 8.40 மணிக்கு வந்து, 8.50 மணிக்கு புறப்படும், திருப்பூருக்கு இரவு 9.33 மணிக்க வந்து 9.35 மணிக்கு புறப்படும். கோவை ஜூனியர் ரயில் நிலையத்திற்கு இரவு 10.37 மணிக்கு வந்து 10.40 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில் 29ம் தேதி சனிக்கிழமை கன்னூரில் இருந்து அர்சிகெரோ செல்லும்போது கோவை ஜூனியர் ரயில் நிலையத்திற்கு மதியம் 1.50 மணிக்கு வந்து 1.55 மணிக்கு புறப்படும். திருப்பூருக்கு 2.40 மணிக்கு வந்து 2.42 மணிக்கு புறப்படும். ஈரோட்டிற்கு மாலை 3.35 மணிக்கு வந்து 3.45 மணிக்கு புறப்படும். சேலத்திற்கு 4.35மணிக்கு வந்து 4.45 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Namakkal, Southern railway, Train