ராசிபுரம் அருகே அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் அரசு பள்ளி மாணவ மாணவிகளின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில்1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்விபயின்று வருகின்றனர். பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்தின் மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
பள்ளி நேரங்களில்ஒரே ஒரு பேருந்து இயக்கப்படுவதால் அரசு பள்ளி மாணவ மாணவிகள் பேருந்தின் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவிகளை தடுக்க பள்ளி நேரத்தின்போது கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறையும் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bus, Local News, Rasipuram, School students