முகப்பு /நாமக்கல் /

பிற்படுத்தப்பட்டோர் கடன் பெற முன்னுரிமை.. கடன் வாங்குவதற்கு இத்தனை திட்டம் இருக்கா?

பிற்படுத்தப்பட்டோர் கடன் பெற முன்னுரிமை.. கடன் வாங்குவதற்கு இத்தனை திட்டம் இருக்கா?

மாதிரி படம்

மாதிரி படம்

Namakkal collector | பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடன் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - நாமக்கல் ஆட்சியர்.

  • Last Updated :
  • Namakkal, India

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் கடனுதவி வழங்ப்படுகிறது . இது குறித்து நமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக, சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொது காலக் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாட்டுக் கடன் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கழகம் மூலம் கடனுதவி வழங்ப்படுகிறது.

இந்த கடன் உதவி பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள். பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 60 வயதுக்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

பொதுகால கடன் திட்டம், தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.15 லட்சம் வரை கடனுதவி பெறலாம். ஆண்டு வட்டி விகிதம் 6 முதல் 8 சதவீதம் வரை. பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை கடனுதவி பெறலாம். ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம். நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம். நுண் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையும், ஒரு குழுவிற்கு ரூ. 15 லட்சம் வரையும் கடன் வழங்கப்படுகிறது.

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு ஒரு கறவை மாட்டிற்கு ரூ. 30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம் ரூ.60 வரை கடனுதவி வழங்கப்படும். கடன் விண்ணப்பங்களை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், ரேசன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் மாவட்ட பிற்படுத்தபட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும். பின்னர் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு கடன் உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Govt Scheme, Local News, Namakkal