முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் மாவட்ட மக்களே உஷார்... நாளை இங்கெல்லாம் மின் தடை

நாமக்கல் மாவட்ட மக்களே உஷார்... நாளை இங்கெல்லாம் மின் தடை

மின் தடை

மின் தடை

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (செவ்வாய் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (07-02-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.

Must Read : கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 150 வயது... இந்த ரயில் நிலையத்திற்கு இத்தனை சிறப்புகளா!

மின் தடை பகுதிகள்:

பரமத்தி வேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட சோழசிராமணி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோம் பெறும் சுள்ளிபாளையம், சோழசிராமணி, சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம் மற்றும் பி.ஜி.வலசு உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Namakkal, Power cut, Power Shutdown