முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் கோழிப்பண்ணையாளர்கள் போராட்டம் வாபஸ்.!

நாமக்கல்லில் கோழிப்பண்ணையாளர்கள் போராட்டம் வாபஸ்.!

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு

Namakkal Poultry Farmers | நாமக்கல் கோழிப்பண்ணையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்ததால் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal | Namakkal

இரண்டு நாட்களாக நடைப்பெற்ற உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் அறிவித்தனர்.

நாள்தோறும் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு வழங்குவதுடன் தமிழகம், கேரளா, புதுவை உள்ளிட்ட பகுதிகளுக்கு சில்லறை விற்பனை செய்யப்படுகிறது. மீதம் உள்ள முட்டைகள் வட மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகளுக்கு நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவானது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்கிறது.

முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்துள்ளது. கடந்த 20 நாட்களில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ஒரு ரூபாய் 25 காசுகள் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவானது ஏற்கனவே முட்டை விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்துள்ள நிலையில் பண்ணையாளர்களிடம் வியாபாரிகள் மேலும் 40 காசுகள் விலை குறைத்து 4 ரூபாய்க்கே முட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த சூழலில் உற்பத்தி செலவை விட குறைவாக முட்டையை விற்பனை செய்வதால் பண்ணையாளர்களுக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும் விலை நிர்ணயத்தில் உள்ள குளறுபடிகளை கண்டித்துகோழி பண்ணையாளர்கள் நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்

முட்டை உற்பத்தி செலவிற்கு ஏற்ற வகையில் குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், ஒவ்வொரு மண்டலத்திற்கும் உற்பத்தி மற்றும் பருவ நிலைக்கு ஏற்றவாறு விலை வித்தியாசத்தை ஆண்டிற்கு 3 அல்லது 5 முறை மட்டுமே மாற்றம் செய்ய வேண்டும், வியாபாரிகளுக்கு குறைந்தபட்சம் 2 முதல் அதிகபட்சம் 5 பைசா வரை மட்டுமே மைனஸ் பரிந்துரைக்க வேண்டும், முட்டை கோழி பண்ணையாளர்களையும், நுகர்வோரையும் ஏமாற்றும் வகையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மைனஸ் விலையை நடைமுறைப் படுத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்டபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்

இந்தநிலையில் கோழிப்பண்ணையாளர்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்வதாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தெரிவித்ததால் இரண்டு நாட்களாக நடைப்பெற்ற உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக கோழிப்பண்ணையாளர்கள் அறிவித்துள்ளனர்.

First published:

Tags: Egg, Local News, Namakkal