திருவையாறில் நடைபெற்ற பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சியையொட்டி, பள்ளிபாளையம் அருகே உள்ள எஸ்.பி.பீ. காலனி முருகன் கோவிலில் பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சேஷ சாயி காகித ஆலையின் பணியாளர்கள் தங்கி உள்ள எஸ்.பி.பீ காலனி பகுதியில் முருகன் கோவில் மற்றும் ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் மார்கழி மாத பஞ்சரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. வருடா வருடம் மார்கழி மாதம் திருவையாறு பகுதியில் நடைபெறும் பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியை தழுவி இப்பகுதியில் பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்று வருவது வழக்கம்.
இதனைத் தொடர்ந்து இந்த வருடம் இன்று திருவையாறில் நடைபெற்ற பஞ்சரத்தின கீர்த்தனை நிகழ்ச்சியை தொடர்ந்து பள்ளிபாளையம் பகுதியிலும் எஸ்.பி.பீ காலனி முருகன் கோவில் வளாகத்தில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் சேலம் சங்கரதாஸ் மிருதங்கம் வாசிக்க, சேர்தலா சத்தியமூர்த்தி வயலின் வாசித்து, திருப்பூர், சேலம், சென்னிமலை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்த பாடகர்கள் ராமர் அவதாரமான பெருமாள் பற்றிய பஞ்சரத்ன கீர்த்தனை எனும் வாய்ப்பாட்டினை பாடினர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
பின்னர் வளாகத்தில் அமைந்திருந்த முருகன் மற்றும் ராமர் உள்ளிட்ட கடவுள்களுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியின் இறுதியாக பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான சேஷ சாயி நிறுவனத்தின் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal