முகப்பு /நாமக்கல் /

"விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி" 4 ஆண்டுகள் முயற்சித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற ராமகிருஷ்ணசாமி!

"விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி" 4 ஆண்டுகள் முயற்சித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற ராமகிருஷ்ணசாமி!

X
விடா

விடா முயற்சியுடன் தொடர்ந்து படித்தால் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற முடியும

UPSC EXAM | ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு 2019 முதல் 2022 வரை நான்கு ஆண்டுகள் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி வந்தார்.

  • Last Updated :
  • Namakkal, India

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) நடத்திய சிவில் சர்வீஸ் தேர்வில் நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் ஆர். ராமகிருஷ்ணசாமி தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன்- தனலட்சுமி தம்பதியர் மகன் ராமகிருஷ்ணசாமி(28). இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. மெக்கானிக்கல் 2016-இல் முடித்துள்ளார்.

அதன் பிறகு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி பின்னர் பணியை துறந்து அரசு தேர்வுக்கு படித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய பொறியியல் துறை பணியாளர்களுக்கான தேர்வில் வெற்றி பெற்று, 2019-இல் நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக பணியமர்த்தப்பட்டார்.

ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற கனவோடு 2019 முதல் 2022 வரை நான்கு ஆண்டுகள் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி வந்தார். முதல் மூன்று தேர்வுகளில் தோல்வி அடைந்த போதும் விடாமுயற்சியின் காரணமாக 2022-ல் நான்காவது முறையாக எழுதிய தேர்வில், அகில இந்திய அளவில் 117 ஆவது இடத்தையும், தமிழக அளவில் இரண்டாம் இடத்தையும் ராமகிருஷ்ணசாமி பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நாமக்கல் பேருந்து நிலையம் அருகே தனியாக அறை எடுத்து தங்கி பணியாற்றி வந்த இவர், யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரவு, பகல் பாராமல் படித்து தற்போது இந்த சாதனையை எட்டியுள்ளார். அவருக்கு மாவட்ட தொழில் மையம் சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Namakkal, UPSC