நாமக்கலில் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த திருநங்கை ஸ்ரேயா பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் ஆவரங்காடு பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஸ்ரேயா பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் பத்தாம் வகுப்பு வரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி படித்து வந்த நிலையில் பதினோராம் வகுப்பு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்து வந்தார்.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 337 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார். இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
ஸ்ரேயா பெற்ற மதிப்பெண்கள்: தமிழ் 62, ஆங்கிலம் 56, பொருளியல் 48, வணிகவியல் 54, கணித பதிவியல் 58, கணிணி பயன்பாடு 89 என மொத்தம் 337 பெற்று தேர்ச்சி பெற்று அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
செய்தியாளர்: ரவிச்சந்திரன் ராஜகோபால்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal, Public exams