நாமக்கல் ஒசக்கோட்டை சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு உடலில் கத்தி போட்டு இளைஞர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
நாமக்கல் மாவட்டம் புதுக்கோட்டை கிராமத்தில் ஒசகோட்டை சௌடேஸ்வரி அம்மன் கோயிலில்திருவிழா நடைபெற்றது. இதில் வினோத வழக்கமாக உடலில் கத்தி போட்டு நேர்த்தி கடனை செலுத்தும் வழக்கம் நடைபெற்றது.
நாமக்கல் ஒசக்கோட்டை கிராமத்தில் பிரசித்திப் பெற்ற சௌடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை நாளில் இளைஞர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டும் சௌடேஸ்வரி அம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் மாவட்டத்தை சேர்ந்த தேவாங்கர் சமுதாயத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அம்மன் கோவில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆடியபடி உடலில் கத்தி போடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. நடைபயணமாக கோவிலுக்கு வந்திருந்த சேலம் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதி பக்தர்கள் இதில் அதிக அளவில் ஈடுபட்டனர்.
ஏராளமான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்துகொள்வதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் கூட்ட நெரிசல் மற்றும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
நாமக்கல்லில் ரசாயணம் கலந்த பச்சை பட்டாணி விற்பனை- அதிரடி சோதனை நடத்தி பறிமுதல் செய்த அதிகாரிகள்
இது குறித்து பேசிய கோயில் நிர்வாகி, ‘அடுத்த ஆண்டு கூட்டநெரிசல் ஏற்படாத வகையில், பொதுமக்கள் சிரமமின்றி கடவுளை வணங்கி செல்லும்வகையில் போக்குவரத்து மாற்றங்களை காவல்துறை செய்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
செய்தியாளர்: பிரதாப், நாமக்கல்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal