லட்சார்ச்சனை மகா யாகத்தை முன்னிட்டு நாமக்கல் ராமாபுரம் புதூரில் உள்ள ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் 408 பேனா. 408 பென்சில் மாலையுடன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நாமக்கல் நகராட்சி ராமாபுரம் புதூரில் உள்ள ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் ஆலயத்தில் லட்சார்ச்சனை மகாயாகத்தை முன்னிட்டு சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் தேர்வில் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற வேண்டி 408 பேனா. 408 பென்சிலை மாலையாக அணிவித்து சிறப்பு யாகம் செய்யப்பட்டது.
மேலும் கோவில் வளாகத்தில் உள்ள சக்கரத்தாழ்வாரும் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்து பேனா, பென்சிலை பிரசாதமாக வாங்கிச் சென்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal