முகப்பு /செய்தி /நாமக்கல் / பெண் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை.. நாமக்கல் அருகே பரபரப்பு!

பெண் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை.. நாமக்கல் அருகே பரபரப்பு!

நாமக்கல்

நாமக்கல்

Namakkal suicide | கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் பெண் கிராம நிர்வாக அலுவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் அருகே பெண் கிராம நிர்வாக அலுவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள குன்னமலை சிக்கிநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (35). இவர் நாமக்கல் தொட்டிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருச்செங்கோடு தாலுகா பிரதி கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்த நவீனா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ளார்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக நவீனா மனமுடைந்த நிலையில் இருந்து வந்தார்.

நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது நவீனா தனது புடவையால் தூக்கு போட்டு கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், நவீனாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க : நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின் தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கா?

இது குறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நவீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் நவீனா தந்தை நடராஜன் நல்லூர் காவல் நிலையத்தில் தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாக புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர்: ரவிச்சந்திரன், நாமக்கல்

First published:

Tags: Crime News, Local News, Namakkal, Suicide