நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயிலில் ஒன்றாக உள்ளது. இக்கோயிலுக்கு தினசரி ஏராளமான மக்கள் வருகை புரிவார்கள். அதுமட்டுமின்றி பிரதோஷம் மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தை விட உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் அதிக அளவில் மக்கள் கைலாசநாதரை தரிசிக்க வருகை தருவார்கள்.
இந்த நிலையில், இக்கோயில் வளாகத்தின் முன்பு 40 கால் மண்டபம் அருகே சிலர் கடை போட்டு ஆக்கிரமித்து இருந்தனர். மேலும் கடை கோயில் அருகிலே இருந்ததால் தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் நிறுத்துவதற்கும் சிரமம் ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால், அந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றவேண்டும் என புகார்கள் எழுந்தன. இதனையடுத்து 40 கால் மண்டபம் பகுதியில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு நடத்தி அங்கு போடப்பட்டு இருந்த மூன்று கடைகள் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்ததை அறியப்பட்டது. இதையடுத்து ஊழியர்கள் மூலம் அந்த மூன்று கடைகளையும் அகற்றினர்.
மேலும் இனிவரும் நாட்களில் அப்பகுதியில் யாரும் கடை போடாமல் இருக்க தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
செய்தியாளர்: மதன், நாமக்கல்.
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.