பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் குடவரைக் கோவில்களில் குடிகொண்டுள்ள நரசிம்மர் -அரங்கநாதர் சுவாமிகளை வணங்கியபடி நகரின் மையப்பகுதியில் சுமார் 18 அடி உயரம் கொண்ட அருள்மிகு ஆஞ்சநேயர் சுவாமி அருள்பாலித்து வருகிறார்.இந்நிலையில்பொங்கல் பண்டிகை, தை மாத முதல்நாள் மற்றும் முதல் ஞாயிறு கிழமையை முன்னிட்டு, நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதிகாலையில் நடை திறக்கப்பட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து உச்சிக் கால பூஜையில் ஆஞ்சநேயருக்கு நல்லெண்ணெய், சிகைக்காய், திருமஞ்சனம்,பால், தயிர் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
Pongal 2023 : பொங்கல் வசூலை அள்ளியது.. நாமக்கல் ஆட்டுச்சந்தையில் இத்தனை கோடி வரை வியாபாரமா?
செய்தியாளர்: பிரதாப், நாமக்கல்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal