நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிபாளையம், காவிரி கரையோர பகுதிகளாக உள்ளது. இப்பகுதியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். தொடர்
மழை மற்றும் ஆற்றில் வெள்ளம் ஏற்படும்போது இப்பகுதியில் உள்ள கரையோர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
தற்போது, கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால். கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளிலிருந்து நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருகிறது. மேலும் தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஒரு சில நாட்களில் அணை 120 அடியை எட்டும் என்பதால் அணையின் தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளது.
இதனால் பள்ளிபாளையம், குமாரபாளையம் காவிரி ஆற்றின் கரையோர கிராமங்களின் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் தாழ்வான இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பொதுமக்கள் யாரும் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல் மற்றும் துணி துவைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அவசர கால உதவிக்கு, மாவட்ட அவசர கால நடவடிக்கை மையம்-1077, காவல் துறை-100, தீயணைப்பு துறை-101, மருத்துவ உதவி-104, ஆம்புலன்ஸ் உதவி-108 ஆகியவற்றிற்கு தொடர்புகொள்ளலாம். மேலும் குமாரபாளையம் வட்டத்திற்கு 97869- 84577, திருச்செங்கோடு வட்டத்திற்கு 94450- 00545, பரமத்திவேலூர் வட்டத்திற்கு 94450- 00546, மோகனூர் வட்டத்திற்கு 99524 -12755, ஆகிய எண்களில் சம்மந்தப்பட்ட அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: மதன், நாமக்கல்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.