நாமக்கல் மாவட்டம் ஆரியூரில், பிரசித்தி பெற்ற முத்துசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் முத்துசாமி, மகா கணபதி, சப்த கன்னிமார், கருப்பண்ண சுவாமி ஆகிய தெய்வங்கள் எழுந்தருளி உள்ளன. இக்கோவிலில், புணரமைப்பு பணிகள் முடிவடைந்து வருகின்ற 26-ம் தேதி கும்பாபிேஷகம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கணபதி பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து, கணபதி, மகாலட்சுமி மற்றும் நவக்கிரக ஹோமம், தீபாராதனையும் நடந்தது.
அதனை தொடர்ந்து, மோகனூர் காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள் புனித நீராடினர். அங்கிருந்து, 3,000க்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு, யானை, குதிரை, பசு உள்ளிட்டவையுடன் பின் தொடர, 10 கி.மீ துாரம் நடந்து சென்று கோவிலை அடைந்தனர். தீர்த்த குட ஊர்வலத்தில் கேரள செண்டை மேளம், மேளதாளத்துடன் ஒயிலாட்டத்துடன் சுவாமி ஊர்வலமும் நடைபெற்றது.
நாமக்கல்லில் மணமக்களுக்கு தலா 2 கிராம் தங்கம் நாணயங்களை வழங்கிய அமைச்சர் மதிவேந்தன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal