நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே காவிரி ஆர் எஸ் பகுதியில் கண்ணனூர் மாரியம்மன் என்ற திருக்கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சில தினங்களுக்கு முன்பு பூச்சாட்டுதல் கொண்டு திருவிழா தொடங்கப்பட்டது. தொடர்ந்து ஒரு வார காலமாக திருவிழா நடைபெற்று வருகிறது.
இக்கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தம் குடம் எடுத்தல், அக்கினி சட்டி எடுத்தல், அலகு குத்துதல் என ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து மேளதாளத்துடன் ஊர்வலமாக சென்று கண்ணனூர் மாரியம்மனுக்கு தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றினர். இதில், திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
மேலும் சிறப்பு வாய்ந்த கண்ணனூர் மாரியம்மன் கோயில் திருவிழா ஆடி மாதம் வருடாவருடம் சிறப்பாக நடைபெறும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. தற்போது இந்த விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் என வெகு விமரிசையாக நடைபெற்றது.
இங்கு அம்மனை நினைத்து தீராத பிரச்சனைகள் தீர வேண்டும் என்று வேண்டுதல் வைத்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். கொரோனா காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்தாண்டு சிறப்பாக அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
மேலும் சக்தி அழைத்தல், அம்மன் திருவீதி உலா, பொங்கல் வைத்தல், மாவிளக்கு ஊர்வலம், வாண வேடிக்கை, மஞ்சள் நீராடல், என கோயிலின் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக நடைபெறும்’ என்று தெரிவித்தனர்.
செய்தியாளர்: மதன் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.