முகப்பு /நாமக்கல் /

3 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டவுள்ள சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு.. களம் காண தயாராகும் காளைகள்!

3 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டவுள்ள சேந்தமங்கலம் ஜல்லிக்கட்டு.. களம் காண தயாராகும் காளைகள்!

X
களம்

களம் காண தயாராகும் காளை

Namakkal senthamangalam jallikattu | 3 வருடங்களுக்கு பின் சேந்தமங்கலத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதால், காளைகளை களமிறக்க அதன் உரிமையாளர்கள் ஆர்வமுடன் பயிற்சி அளித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு விழா நடைபெறுவது வழக்கம். கொரோனா காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு விழா இப்பகுதியில் நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு விழாவை வரும் மார்ச் மாதம் 3ஆம் தேதி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை அடுத்து நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியில் ஜல்லிக்கட்டு காளைகளை வைத்திருக்கும் உரிமையாளர்கள் அவர்களது காளைகளை ஆர்வத்துடன் தயார் செய்து வருகின்றனர்.

பாரம்பரிய முறைப்படி காளைகளை வயல் பகுதிகளில் கட்டி பயிற்சி அளித்து வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு இப்போட்டி நடத்தப்படுவதால் தங்களது காளைகள் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் காளைகளின் உரிமையாளர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.

First published:

Tags: Jallikattu, Local News, Namakkal