நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எளையம்பாளையத்தில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் ”விகாஸ் ஸ்போர்ட்ஸ் டிராபி 2023- என்ற பெயரில் கல்லூரிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. பல்வேறு மாவட்டத்தில் இருந்து கல்லூரி மாணவிகள் வந்து இந்த போட்டிகளில் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர்.
வாலி பால், ஹேண்ட்பால், கபடி, த்ரோபால், கோ- கோ, தடகள போட்டிகள் ஆகியவை நடைபெற்று வருகிறது. கல்லூரி சேர்மன் பேராசிரியர் மு.கருணாநிதி தலைமை வகித்து விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.
1,500 மாணவிகள் கலந்து கொண்டு விளையாடும் பல்வேறு போட்டிகளின் ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் பேபி சகிலா சிறப்பாக செய்துள்ளதாக விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளவந்த மாணவிகள்தெரிவித்தனர். நிகழ்ச்சி மேலாளர் டி. ஸ்ரீ தர்ம ராஜா, விளையாட்டு ஆசிரியர்கள் சதீஷ், கீதா உள்ளிட்டவர்கள் இந்த போட்டிகளை கண்காணித்து வருகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal