தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் இணைப்பு சங்கமான கொல்லிமலை அனைத்து வணிகர் நல சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கொல்லிமலை அனைத்து வணிகர் நல சங்கத்தின் தலைவர் வருணன் தலைமை தாங்கினார். செயலாளர் பூபதி வரவேற்புரை நிகழ்த்தினார். முதல் கட்டமாக செங்கரை சுற்றுவட்டார பகுதியில் தொடங்கிய இந்த நிகழ்வை அடுத்து, வளப்பூர் நாடு, அரியூர் நாடு, குண்டூர் நாடு உள்ளிட்ட பகுதியில் உள்ள உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
நிகழ்ச்சியில், அனைத்து வணிகர்களும் தமிழ்நாடு அரசு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினாரக இணைந்து, அரசின் பல்வேறு நலதிட்ட உதவிகளை பெற்று பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மே 5ம் தேதி, ஈரோட்டில் நடைபெறவிருக்கும் மாநில மாநாட்டில் வணிகர்கள் குடும்ப உறுப்பினர்களோடு திரளாக கலந்துகொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் சங்கத்தின் பொருளாளர் தென்னவன் நன்றி கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal