நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் மிகவும் பழமைவாய்ந்த சோழீஸ்வரர், செல்லியம்மன் கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களை குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டும் பங்கேற்று நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பல்வேறு சர்ச்சைகள் இருந்து வந்த நிலையில் ஊர் மக்கள் சார்பில் தேர் திருவிழா நடத்த பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் தேர் திருவிழா நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்துள்ளது.
இதுதொடர்பாக உதவி ஆட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அறநிலையத்துறை அதிகாரிகளை கொண்டு தேர் திருவிழா நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்த் திருவிழா தொடங்கப்பட்டது. இது ஊர் மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் திருவிழாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் ஊர் மக்கள் புறக்கணித்து வந்தனர்.

விழுப்புரம் தேர் திருவிழா
மேலும் வீடுகளில் மக்கள் கருப்புக்கொடி கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில், இன்று நீண்ட வருடங்களுக்கு பிறகு ஆனி மூல தேர்த் திருவிழா 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் இழுத்து முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக வரப்பட்டது.

விழுப்புரம் தேர் திருவிழா
மேலும் கோயிலுக்குள் ஒரு தரப்பு மக்களை அடைத்து வைத்து தேர் இழுக்கப்பட்டதால் பரபரப்பு சூழ்நிலை நிலவியது. அங்கிருந்த மக்கள் காவல்துறையினர் அராஜகம் ஒழிக என கோசங்களை எழுப்பினர். அதுமட்டுமின்றி தேரை தங்களையும் இழுக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

விழுப்புரம் தேர் திருவிழா
இதற்கிடையில் அனைத்து சமூக மக்களும் பங்கேற்ற வேண்டும் என்றும் இரு தரப்பு பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். தற்போது தேர் திருவிழாவில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க அறநிலையை துறையினரே தேர் இழுப்பார்கள் என காவல்துறையினர் அறிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தேர் இழுக்கும் போது ஒரு சமூகத்தினர் மட்டும் தேர் இழுத்ததாலும், மற்றொரு சமூகத்தினரை வெளியே விடாமல் தடுத்ததால் காவல்துறை தடுப்புகளை மீறி வெளியேற முயற்சித்தனர்.
மேலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோயிலுக்கு முன் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனையடுத்து பேச்சு வார்த்தையில் காவல்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் சமாதான ஆகாத மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் திருவிழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்: மதன் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.