நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தினசரி மார்க்கெட்டில் பச்சை பட்டாணிக்கு பதிலாக காய்ந்த பட்டாணியை தண்ணீரில் ஊற வைத்து பச்சையாக தெரிவதற்காக பச்சை வண்ணம் சேர்த்து விற்பதாக நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது.
அந்தப் புகாரைத் தொடர்ந்துநகராட்சி ஆணையாளர் கணேசன் உத்தரவின் பேரில் துப்புரவு ஆய்வாளர் குமரவேல் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் தினசரி மார்க்கெட்டில் காய்கறி கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சில காய்கறி கடைகளில் காய்ந்த பட்டாணிகளை மூட்டை மூட்டையாக வாங்கி வைத்துபாத்திரங்களில் பச்சை நிறம் கொண்ட ரசாயனப்பவுடர்களை தண்ணீரில் கலந்து அதில் பட்டாணிகள் ஊறவைக்கப்பட்டிருப்பதையும் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
உடலுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் இது போன்ற நிறம் கலந்த பட்டாணிகளை விற்பனை செய்வது குற்றமென எச்சரித்த அதிகாரிகள் இனிமேல் இதுபோல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
பச்சை பட்டாணி கிலோ ரூ 50 முதல் 80 வரைவிற்கப்படுவதால் குறைவான விலைக்கு பச்சை வண்ணம் பூசப்பட்ட இந்த பட்டாணி விற்பனை செய்யப்படுகிறது.
நாமக்கல் | எலந்தைகுட்டையில் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்த ஆட்சியர்
செய்தியாளர்; பிரதாப், நாமக்கல்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal